- செ.சாந்தி சின்னத்தம்பி
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பாதையில் உன்
காலடி கேட்குமென்று...
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதில் மணியோசை
வீழுமென்று...

சகித்திருந்தேன் சகித்திருந்தேன்
சங்கடம் எல்லாம்
தீருமென்று...
நினைத்திருந்தேன் நினைத்திருந்தேன்
நிதமும் நினைவுகள்
தொடருமென்று....
தனித்திருந்தேன் தனித்திருந்தேன்
தனிமையே தண்டனையாய் மாறுமென்று...
தளர்ந்திருந்தேன் தளர்ந்திருந்தேன்
தங்கமகன் வரவினி
வாராதென்று....
மரித்திருந்தேன் மரித்திருந்தேன்
மனதளவில் சோர்வு
வந்ததென்று....
நொந்திருந்தேன் நொந்திருந்தேன்
நொடிகளும் நகராக் காலமென்று....
நம்புகின்றேன் நம்புகின்றேன்
நல்லதொரு செய்தி
வருமென்று....
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
Tamil Poem: பணமும் மனிதமும்!
பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு
Tamil Poem: ரோஜா மலர்கள்!
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!
{{comments.comment}}