- புலவர் சுதந்திரக்கவி ப. ஈஸ்வரநாதன்
காலையில் பிறக்கிறேன்
மாலையில் இறக்கிறேன்
கலர் கலராய் பூக்கிறேன்
வாசமாய் வாழ்கிறேன்
தென்றல் தாலாட்ட
ஆடியே மகிழ்கிறேன்

சூறாவளி காற்றில்
சுழன்றும் போகிறேன்
மலர்களின் அரசியாய்
மகுடமாய் வருகிறேன்
முட்கள் சூழ்ந்த போதும்
சிரித்து மகிழ்கிறேன்
ஒரு நாள் வாழ்விலும்
மகிழ்ந்தே மலர்கிறேன்
கனத்த இதயத்தோடு
கல்லறையிலும் இருக்கிறேன்
கோவில் கருவறையிலும்
வலம் வருகிறேன்
எந்த நிலையிலும் துன்பம் துறக்கிறேன்
எல்லாம் மாயைதான் நிச்சயமற்ற வாழ்வில்!
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)
மீனவர்களின் கண்ணீர் பயணம்!
Tamil Poem: பணமும் மனிதமும்!
பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு
Tamil Poem: ரோஜா மலர்கள்!
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
{{comments.comment}}