சென்னை: மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கிய நிலையில் தான் அதை முடித்து விட்டதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அப்போது வீடு வீடாக அலுவலர்கள் வந்து கணக்கெடுப்பை நடத்துவார்கள். அதற்கு முன்பாக பொதுமக்கள் தாங்களாகவே தங்களது விவரங்களை சுயமாக வழங்க ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது இன்று முதல் தொடங்கியுள்ளது.
மிகவும் எளிமையான முறையில் 33 கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதுமானது. இதை இன்று முதல்வர் விஜய் செய்து முடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.
அப்ப நீங்களும் செய்து முடித்து விட்டீர்களா?
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}