Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
Apr 20, 2026,11:51 AM IST
- ஔவை அ.ர.தீபாரவி
அருகில்
இல்லை
எனினும்
உறவுநீ!
பேசாமல்
பேசும்
வெள்ளை
நிழலே!
கதிரொளி
வாங்கி
கனவில்
வருவாயே!
கவிகளின்
கற்பனைக்குத்
தூண்டுகோல்
நீயாவாய்!
பிரிவின்
உறவுகளுக்கு
ஆறுதலாய்த்
தோழியாவாய்!
இரவு
வானில்
தேவதையும்
நீதானே!
நெற்றியில்
பொட்டாவாய்!
அங்கேயே
இருந்திடடி
அதுவே
சிறப்படி!
(தமிழ் அருவி வழங்கும் சித்திரமும் கவிதையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).