விவாகரத்தில் விம்மிய தாய் உள்ளம்

Su.tha Arivalagan
Aug 05, 2026,11:45 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


பொருத்தம் பார்த்து

பொருத்திய இருமனம்,

திருமணமாகி தித்திக்க

திகட்டியது ஏனம்மா?

 

பட்டக்கடன் அடைக்கவில்லை

வாழாவெட்டியானாய்

நியாயமா?

பெற்றெடுத்த வயிறும்

பற்றியெரியுது பாரம்மா!


உடம்பை உருக்கி

சேமித்த உழைப்பும்,

புறங்கையைக் காட்டியே

போனதென்ன மாயமா?




புரிந்துணர்வோடு இணையர்களிருக்க

பிரிதலும் தேவைதானா?

புத்திகெட்டு நீதிமன்றமும்

செல்லத்தான் வேண்டுமா?


அற்பசெயலை செய்யமுன்

யோசித்தாலென்ன கொஞ்சமா?

குழந்தைகளும் அனாதையாவது

அவர்களின் சாபமா?


குடும்பத்தையும் நினைத்திடு

நெஞ்சத்தின் ஓரமா?

புரிதலோடிருக்க

வாழ்க்கை பிரகாசிக்குமே

 சிந்திப்போமா?