Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!

Aug 04, 2026,01:35 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


அது ஒரு கனாக்காலம்...

பள்ளிக்காலம் முடிந்து 

கல்லூரியில் காலடி வைக்க.... 


மின்மினிகள் மனதில் பறக்க எண்ணியிருந்த நேரம்....

இருந்ததோ ஓர் இருபாலர் அரசுக் கல்லூரி...


அதில் தடம் பதித்தால் தடம் மாறிட நேரிடுமோ எனத் தந்தை அஞ்சியதால்...

அஞ்சல் வழிக் கல்வியே போதுமெனத் தொடர்ந்த நேரம்  ...


கல்லூரி வாழ்க்கை என்பது கனவாக... கதையாக....

மாற்றியதோ காலம் மாறியதோ சூழல்...




நனவாக இருந்திருந்தால்....

நடந்திருக்கும் யாவையும் மாறி இருக்குமோ ?...


இருள் என்னும் அஞ்ஞானம் இன்னும் விலகி இருக்குமோ? ...

எட்டு வைத்த அடிகள் வேறு ஏற்றும் தந்திருக்குமோ ?....


சட்டென்று ஒரு வெறுமை மனதில் இடராதிருந்திருக்குமோ?...

இருப்பினும் என்ன? கவி வழியே புது நடை போட...


பாதை வகுக்கவே மாற்றியதோ.... காலம் 

மாறியதோ ...சூழல்!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!

news

Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

news

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்