அனாதைகள் யாருடைய குழந்தைகள்???

Su.tha Arivalagan
Jul 25, 2026,04:49 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


ஆண் பெண்

இருவரின் 

இச்சையில் பிறந்ததாம்!


காதல் மோகத்தில் இன்பம் தீர்க்க 

இனிதே  

பெற்றெடுத்ததாம்!


இயலாமையினாலும் இழிவான 

செயலாலும் அனாதையானதாம்!


அன்பென்ற 

அமுதம் அள்ளிப் பருக மறந்த 

மழலைகளாம்!


அரக்கதனமாக 

விட்டு செல்லும்

அற்ப 

பெற்றோர்களாம்!




மனம் உடைந்து

மகிழ்ச்சி இழந்து 

விதியென

வீதியிலும்

பசியென வாழ்விலும்

யாசகனாகியவர்களாம்!


மதி இழந்த

முறைகேடான

வேலையால் 

சிறுவர் 

சீர்திருத்த

பள்ளியும்

நாடினார்களாம்!


கடைசியில் 

அனாதைகள்

கடவுளின்

குழந்தைகள் என்ற பட்டம் பெற்றார்களாம்!


அனாதைகள் 

எல்லாம்

கடவுளின் குழந்தைகளென்றால்

கடவுளுக்கும் 

குடும்ப கட்டுபாடு அவசியம்தானாம்!