உழைப்பின்றி உயர்வில்லை!

Su.tha Arivalagan
Jul 22, 2026,01:09 PM IST

- புலவர் கவித்தென்றல் ப.ஈஸ்வரநாதன்

          

இரும்பு  கரமாய் உழைக்கும் கரங்களாகுமே 

வியர்வையில் குளித்திடும்  விடாத முயற்சியாகுமே


நிறைந்த உழைப்பும்  உயர்ந்த கைகளுமே


ஊக்கமும் ஆக்கமும் வெற்றியை தொட்டிடுமே

    

கடினமாய் உழைத்திடுவோம்

பலனும் பெரிதாகுமே


உழைப்பால் வாழ்வில்

நிலையான வெற்றியாகுமே




சாதிக்க விடாமல்

தடைகள் வந்தாலுமே


வெற்றிக்கு உதவிடும்

படிக்கற்களாய் அமைத்திடுவோமே


வளமாய்  உழைக்கவே  உயர்ந்தும் நிற்போமே


ஒவ்வொரு நாளும்

வாழ்வும் நலமாகுமே


துயரங்களும் தூங்கிடவே...

துடிப்போடு படித்திடுவோமே


நாளெல்லாம் உழைத்திடுவோம் புகழ்பெற்றே வாழ்ந்திடுவோமே


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று  பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)