இருளை இருளால் விரட்ட முடியாது!
- இரா. மும்தாஜ் பேகம்
கடந்த காலத்தின் சோகங்களையும் எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தையும் தவிர்த்து வாழ்ந்தால் . நிகழ்கால வாழ்க்கை இனிமையாக அமையும்.
-
பார்க்கும்போது ரசிக்கும் கண்களை விட, பார்க்காத போது நினைத்துத் தவிக்கும் மனதில் தான் உண்மையான அன்பும் பாசமும் இருக்கும்.
-
அருகதை இல்லாத இடத்தில் அன்பை செலுத்திவிட்டு ஏமாந்து விட்டேன் என்று சொல்லக்கூடாது. தப்பித்து விட்டேன் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
-
இருளை இருளால் விரட்ட முடியாது. ஒளியால் மட்டுமே அதை செய்ய முடியும். அதே போன்று வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
-
மலை போல் அறிவு இருப்பினும் பொறுமைக்கு ஈடாகாது.கடல் போல் பணம் இருந்தாலும் அன்புக்கு ஈடாகாது
-
செய்யும் துரோகங்களுக்கு அவரவர் மனசாட்சி தரும் தண்டனையே போதுமானது மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டும்.
-
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது
-
ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த பிறகு தான் தெரிகிறது தவறவிட்ட ஆரோக்கியம்தான் உண்மையான செல்வம் என்று.
-
முட்டாள்தனத்தால் ஏமாந்தவர்களை விட இரக்க குணத்தால் ஏமாந்தவர்களே அதிகம். ஏனெனில், இது பச்சோந்திகளும் துரோகிகளும் வாழும் பூமி.
-
சரியான முடிவுகள் எடுத்தால் வெற்றிகள் கிடைக்கும். தவறான முடிவுகள் எடுத்தால் அனுபவம் கிடைக்கும் இரண்டுமே வாழ்க்கைக்கு அவசியம்
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)