உண்ட மயக்கம் கண்ணு சொக்குதா.. வாங்க கலகலன்னு சிரிக்கலாம்!
- ரதிதேவி
சாப்பிட்ட மயக்கம் எல்லோருக்கும் உண்டு. லைட்டா ஒரு தூக்கம் போட்டாதான் பலருக்கும் அடுத்த வேலை அமர்க்களாக நடக்கும். ஆனாலும் வேலை வெட்டியெல்லாம் வச்சுக்கிட்டு எப்படிங்க தூங்க முடியும்.
உங்க தூக்கத்தைக் கலைக்கும் மருந்துடன் வந்திருக்கோம்.. அதுதாங்க ஜோக் கடி (வெடி) குண்டுடன் வந்திருக்கோம்.. படிச்சுட்டு வெடிச்சுச் சிரிங்க.. தூக்கமும் தெறித்து ஓடி விடும்
நண்பன் 1:: என்னடா..யோசிக்கிற....
நண்பன் 2...நீ எழுதிய கவிதை யைத் தான்..
நண்பன் 1..என்ன கவிதை டா
நண்பன் 2....பூ போன்று சிரித்த கவிதா .... அந்த கவிதை டா
நண்பன் 1.. அதுக்கு என்னடா இப்போ....
நண்பன் 1.... அது இல்லடா..... நான்..நம்ம பக்கத்து வீட்டு கவிதா முகத்தைப் பார்த்தா எந்த பூவும் சிரிக்கலையே.
--
பெண் வீட்டார்: வாங்க.வாங்க
மாப்பிள்ளை வீட்டார்: ம்.ம்..வணக்கம். பொண்ணை வர சொல்லுங்க..
(பெண் கைப்பேசியுடன் வர)
மா.வீ: பொண்ண மாப்பிள்ளையை பார்க்க சொல்லுங்க..
பெண்... குனிந்த தலை நிமிராமல்..
மா.வீ: ஏம்மா...மாப்பிள்ளையைப் பாரு
பெண்::ம்ம்
மா..வீ: யோவ்....பொண்ண பார்க்க சொல்லுயா..
பெ..அப்பா: சார்,அவ மாப்பிள்ளையை பார்க்க தான் செய்றா...
மா.வீ: :என்னயா சொல்ற....குனிஞ்ச தலை நிமிரவே இல்லை...
பெ.அப்பா: அது ஒன்னுமில்ல. இங்க கேமிரா இருக்கு.....அவ போனிலே மாப்பிள்ளையை பார்க்கிறா
மா.வீ: ???
--
மணி: டேய் மாதவா.பக்கத்து வீட்டு சங்கர் பையனுக்கு அறிவு அருவி அருவி யா கொட்டுது
மாதவன்:: அப்படியா.. டேய் மணிஎன்னமோ சொன்ன.. சங்கர் வீட்டு பையனுக்கு அருவி அருவி யா கொட்டுதுனு...
மணி: அதுக்கு என்னடா
மாதவன்: அவன் வீட்ல போய் பார்த்தா. அருவியையும் காணோம்.ஆறையும் காணும். ஒரு சொட்டு தண்ணிக்கூட இல்ல
மணி:???
--
சதீஷ்: ஏன்டா.வாசல்ல தலையில் கைவைச்சுட்டு இருக்க
மணி: எவனோ அடைமழை பெய்யுது சொன்னான் .... வெளியே அண்டாவை வைச்சா..
எவனோ தூக்கிட்டு போயிட்டான்....
--