- அகிலா
சென்னை: எங்க பார்த்தாலும் ஜோன்னு மழை.. அப்படின்னு வடிவேலு புலம்புற மாதிரி மக்களும் புலம்பிட்டு இருக்காங்க. மழை தேவைதான்.. ஆனால் வெளியில் போக முடியாம, வேலை வெட்டியைப் பார்க்க முடியாம இப்படியே பெஞ்சுக்கிட்டு இருந்தா எப்படிங்க.. அப்படின்னு அலுக்க வைக்கிற அளவுக்கு இந்த மழை அலும்பு பண்ணிட்டு இருக்கு.
சரி சரி மழையால் டென்ஷனாக வேண்டாம். அதைக் குறைக்க ரெண்டு வடையைக் கடிப்போம்.. கூடவே கடி ஜோக்ஸையும் படிப்போம்.
ராஜா: இந்தப் பாட்ட போட்டு ஆட முடியாது.
ராணி: அது எந்தப் பாட்டு
ராஜா: நிப்பாட்டு!!

கமலா: கடல் தண்ணி ஏன் உப்பா இருக்கு?
விமலா: இனிப்பா இருந்தா ஈ மொய்க்கும் இல்ல!
கோபு: ரகு டிபன் சாப்பிடும்போது காது பொத்தி கிட்டே சாப்பிட்டான் ஏன்? அப்படி என்ன டிபன் அது ?
ராமு: அதுவா.. இடியாப்பம்!
மூர்த்தி: ஒரு நாய் நடுரோட்டில் நின்னு ஓன்னு கத்துச்சாம்?. ஏன்?
கீர்த்தி: ஏன்னா அது ஓநாய்.
ரவி: அவனுக்கு இன்டர்வியு என்றாலே ஏன் பிடிக்காதாம்
சந்திரன்: நாலு பேர் கேள்வி கேக்குறா போல நடந்துக்காதேன்னு அவங்க அப்பா சொல்லி வளர்த்திருக்காராம்!
என்னங்க டென்ஷன் குறைஞ்சிருச்சா.. குறைஞ்சா சந்தோஷம்.. குறையாட்டி அதுக்கு கம்பெனி பொறுப்பில்லைங்க!
(அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}