சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திரும்பப் பெற்றுள்ளார். உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணியும் நீதிமன்ற நடவடிக்கையும்:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் உட்கட்சி நிர்வாக விவகாரங்கள் தொடர்பாகக் கடந்த சில காலமாக பல்வேறு விவாதங்களும் சட்டப் போராட்டங்களும் நடைபெற்று வந்தன. கட்சியின் தலைவர் பதவியை மையமாகக் கொண்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "கட்சியின் நிர்வாகிகளுக்கிடையேயான உள்விவகாரப் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டு விட்டன. இருதரப்பினரும் சுமுகமான உடன்பாட்டிற்கு வந்துள்ளதால், இந்த வழக்கை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை" எனத் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம், மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, வழக்கினை முழுமையாக முடித்து வைத்து உத்தரவிட்டது.
சமரசம் எட்டப்பட்டது எப்படி?

கடந்த சில நாட்களாகவே கட்சித் தலைவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாகப் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் எதிர்காலம், தொண்டர்களின் நலன் மற்றும் எதிர்வரும் அரசியல் நகர்வுகளைக் கருத்தில் கொண்டு மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இந்தச் சமரசம் சாத்தியமாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ராமதாஸ்- அன்புமணி சந்திப்பின் போது, உணர்ச்சிப்பூர்வமான சூழலில் இருதரப்பினரும் கைகுலுக்கி, கட்டித்தழுவி தங்களது வருத்தங்களை மறந்தனர். இதன் விளைவாகவே நீதிமன்றப் படி ஏறிய உட்கட்சி விவகாரம் தற்போது சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
தொண்டர்கள் நிம்மதி :
கடந்த சில மாதங்களாகக் கட்சியினரிடையே நிலவி வந்த குழப்பமான சூழல் தற்போது விலகியுள்ளதால், பாமக தொண்டர்களும் நிர்வாகிகளும் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். சட்ட ரீதியான முரண்பாடுகள் களையப்பட்டு விட்டதால், இனிவரும் நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தும் என தெரிகிறது. ஏற்கனவே ஆளும் தவெக., உடன் பாமக இணக்கமான போக்கை கடைபிடித்து வருவதால், கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. அப்படி தவெக கூட்டணியில் இடம்பெற்றால் பாமக.,விற்கு அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிமுக.,விடம் அதிக இடங்களை கேட்டு பெற பாமக திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
எங்கிருந்து வந்தது??
மெய்மையையே திருமேனி வழிபடா நிற்கா.. சண்டிகேஸ்வர நாயனார்!
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
சின்னஞ் சிறிய சிட்டுக்குருவியே!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
Chettinadu Recipes: செட்டிநாட்டு அடுப்படி.. அமிர்தமான ஸ்வீட்.. நாவில் ஊறும் பால் பணியாரம்!
Be ready to live like an amphibian... தவளை மாதிரி வாழக் கத்துக்கோங்க!
If you are brave enough to say goodbye .. யோசிக்கவே யோசிக்காதீங்க!
If you Say goodbye bravely .. தயங்காமல் சொல்லிடுங்க!
{{comments.comment}}