பயனாளியாக!
Apr 20, 2026,02:36 PM IST
- கவி கலை
ஆயிரம் கனாக்கள் தோன்றலாம்.
உயிரில் கலப்பவை சில!
படைப்பெல்லாம் எனக்காக இருக்கலாம்
படபடக்க வைப்பவை சில!
நடப்பதெல்லாம் நமக்காக நடக்கலாம்
நலம் சேர்ப்பவை சில !
நிலைமைகள் நம்மை நிலைப்படுத்தலாம்.
நிலையை உணர்த்துபவை சில !
நிகழ்வுகள் நம்மை பதற்றமாக்கலாம்
நினைவுகளை பக்குவப்படுத்துபவை சில !
எனவே என் நெஞ்சே!
பட்டறிவுமிகு பயனாளியாய் இரு!
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)