பயனாளியாக!

Su.tha Arivalagan
Apr 20, 2026,02:36 PM IST

- கவி கலை


ஆயிரம் கனாக்கள் தோன்றலாம்.  

உயிரில் கலப்பவை சில!  

 

படைப்பெல்லாம் எனக்காக இருக்கலாம் 

படபடக்க வைப்பவை சில!  

 

நடப்பதெல்லாம் நமக்காக நடக்கலாம்  

நலம் சேர்ப்பவை சில ! 

 

நிலைமைகள் நம்மை நிலைப்படுத்தலாம்.  

நிலையை உணர்த்துபவை சில !  


 


நிகழ்வுகள் நம்மை பதற்றமாக்கலாம்  

நினைவுகளை பக்குவப்படுத்துபவை சில !  

 

எனவே என் நெஞ்சே! 

பட்டறிவுமிகு பயனாளியாய் இரு!


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)