- வே.ஜெயந்தி
பணம் பேசி உலகம் ஓடும்,
பாசம் பேசும் இதயம் ஏது?
பொருள் சேர்க்கும் பொழுது போக,
புன்னகை சேர்க்கும் மனம் எங்கே?
வீடு உயர்ந்து விண்ணை தொட,
உறவு விழுந்து மண்ணில் கிடக்குது.
பணம் பின்னே பாய்ந்த வாழ்க்கை,
பாசம் பின்னே போனதே ஏன்?
நட்பு நழுவ, நெஞ்சம் நொந்தது,
நாளும் தனிமை நிழலாய் நின்றது.

கையில் காசு குவிந்தாலும்,
இதயத்தில் யாரும் இல்லையெனில்
அது வெற்றியா? வெறுமையா?
மனம் மலர்ந்தால் மகிழ்ச்சி வரும்,
நல்ல மனதில் கடவுள் வாழ்வார்
நாம் நன்மையை நெஞ்சில் விதைப்போம்.
பணம் சேர்த்தால் பேர் கிடைக்கும்,
மனம் சேர்த்தால் உலகம் கிடைக்கும்
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}