- வே.ஜெயந்தி
பணம் பேசி உலகம் ஓடும்,
பாசம் பேசும் இதயம் ஏது?
பொருள் சேர்க்கும் பொழுது போக,
புன்னகை சேர்க்கும் மனம் எங்கே?
வீடு உயர்ந்து விண்ணை தொட,
உறவு விழுந்து மண்ணில் கிடக்குது.
பணம் பின்னே பாய்ந்த வாழ்க்கை,
பாசம் பின்னே போனதே ஏன்?
நட்பு நழுவ, நெஞ்சம் நொந்தது,
நாளும் தனிமை நிழலாய் நின்றது.

கையில் காசு குவிந்தாலும்,
இதயத்தில் யாரும் இல்லையெனில்
அது வெற்றியா? வெறுமையா?
மனம் மலர்ந்தால் மகிழ்ச்சி வரும்,
நல்ல மனதில் கடவுள் வாழ்வார்
நாம் நன்மையை நெஞ்சில் விதைப்போம்.
பணம் சேர்த்தால் பேர் கிடைக்கும்,
மனம் சேர்த்தால் உலகம் கிடைக்கும்
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}