- வே.ஜெயந்தி
பணம் பேசி உலகம் ஓடும்,
பாசம் பேசும் இதயம் ஏது?
பொருள் சேர்க்கும் பொழுது போக,
புன்னகை சேர்க்கும் மனம் எங்கே?
வீடு உயர்ந்து விண்ணை தொட,
உறவு விழுந்து மண்ணில் கிடக்குது.
பணம் பின்னே பாய்ந்த வாழ்க்கை,
பாசம் பின்னே போனதே ஏன்?
நட்பு நழுவ, நெஞ்சம் நொந்தது,
நாளும் தனிமை நிழலாய் நின்றது.

கையில் காசு குவிந்தாலும்,
இதயத்தில் யாரும் இல்லையெனில்
அது வெற்றியா? வெறுமையா?
மனம் மலர்ந்தால் மகிழ்ச்சி வரும்,
நல்ல மனதில் கடவுள் வாழ்வார்
நாம் நன்மையை நெஞ்சில் விதைப்போம்.
பணம் சேர்த்தால் பேர் கிடைக்கும்,
மனம் சேர்த்தால் உலகம் கிடைக்கும்
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}