காதல் .. ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்!

Su.tha Arivalagan
Aug 13, 2026,04:24 PM IST

- கவி கலை


சுடராக மனதில் விளைந்த  

சுவடு நீ! 

சாரலாக மனதில் விழுந்த  

துளி நீ! 

கவியாக மனதில் கரைந்த  

காவியம் நீ! 

தூரம் பிரிவுக்கு மட்டுமல்ல, 

புரிதலுக்கும்  தான் , 

வாழ்க்கை வாழ மட்டுமல்ல 

வழங்குவதற்கும் தான். 

காதல் தொடுதல் மட்டுமல்ல 

தொடர்வதற்கும் தான்.




காதல், 

போதும் என்றாலும் பொங்கிடும், 

வேண்டாம் என்றாலும் வென்றிடும்  

விலகிச்சென்றாலும் விரைந்திடும் 

மறைந்திடு என்றாலும் மலர்ந்திடும், 

ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்,  

முரணாக இருந்தாலும்,  

முளைத்திடும்  .


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)