காதல் .. ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்!
- கவி கலை
சுடராக மனதில் விளைந்த
சுவடு நீ!
சாரலாக மனதில் விழுந்த
துளி நீ!
கவியாக மனதில் கரைந்த
காவியம் நீ!
தூரம் பிரிவுக்கு மட்டுமல்ல,
புரிதலுக்கும் தான் ,
வாழ்க்கை வாழ மட்டுமல்ல
வழங்குவதற்கும் தான்.
காதல் தொடுதல் மட்டுமல்ல
தொடர்வதற்கும் தான்.
காதல்,
போதும் என்றாலும் பொங்கிடும்,
வேண்டாம் என்றாலும் வென்றிடும்
விலகிச்சென்றாலும் விரைந்திடும்
மறைந்திடு என்றாலும் மலர்ந்திடும்,
ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்,
முரணாக இருந்தாலும்,
முளைத்திடும் .
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)