- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
சின்னஞ்சிறு விழியாலே
சிக்கல்களைத் தீர்த்தவளே!
கொஞ்சுகின்ற மொழியாலே
உளமதில் உவகை சேர்த்தவளே !
தஞ்சமென மடியில் வந்தமர்ந்து
தாலாட்டு இசைக்கும் தாயானவளே!
விஞ்சுகின்ற அபிநயங்களால்
வித்தைகள் காட்டுபவளே !
தளிர்க்கையால் தலைநீவிப்
பண்பாடும் சேயானவளே !
அல்லலுறும் வேளையிலே
ஆறுதலாய் இருப்பவளே!

அழகிய செவ்விதழால்
ரோஜாவாய்ச் சிரிப்பவளே!
புதிரான வாழ்வினிலே
புதுமைப் பூக்கச் செய்த புது மலரே!
எப்பிறப்பும் என் அருகே வேண்டுமடி நீ எனக்கு
ஏழிசை ராகமும் என்னுள்ளே நான் இசைக்க
பொக்கிஷமாய்க் கிடைத்த வீணையடி நீ எனக்கு !
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}