திருமண நாள்!
Aug 17, 2026,03:33 PM IST
- கவி கலை
மனம் அறிந்து
மாலை அணிந்து
மகிழ்த்திட்ட தருணம்.
முகம் சிவந்து
முறுவல் உதிர்த்து
முத்தமிட்ட தருணம்,
காலம் கனிந்து
காதல் துளிர்த்து
கரம்பிடித்த தருணம்.
வறுமை கடந்து
வாழ்க்கை மலர்ந்து
வாழத் துணிந்த தருணம்,
பல்லாண்டு பயணத்தில்
பார்வையாளராய் இல்லாமல்
பயணித்த தருணம்,
நிறைந்திட்டத் திருமண நாள்.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)