- பசுங்கிளி
வாய்க்கால் கரையோரம்
வயல் காட்டு மேட்டோரம்
வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்
வரவேணும் மாமா நீ
வரவேற்க நா இருக்கேன்
பட்டணந்தான் நீ போய்
கட்டு கட்டா பணம் சேர்த்தாலும்
வயல் வெளியில் நீ இறங்கி
வரப்பு வெட்ட வேணும் மாமா
ஏர்பூட்டி உழ வேணும், என்னோடு கை கோர்த்து
நாத்து நல்லா நட வேணும்
நட்ட பயிர் வளர்ந்திடவே
தண்ணி தினம் பாய்ச்ச வேணும்

கடைக்கண்ணால் நான் பார்க்க
களைகளெல்லாம் நீ எடுக்க வேணும்
பக்குவமாய் பயிர் வளர
சிவசாமி துணை இருக்கும்
கதிர் அறுக்க வேண்டும் மாமா
விளஞ்ச நெல்ல அரிசியாக்கி
வெல்லமெல்லாம் தட்டி போட்டு
பக்குவமா பொங்கல் வச்சி
சிவசாமி கோயிலுக்கு
போலாமே வா மாமா
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்
உலகத்தின் முதல் மொழி அம்மா
விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு
வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்
அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்
ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!
கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி
Travel story: ஏழு வருடங்கள் போதாது.. அந்த 7 நாள் அனுபவத்தைச் சொல்ல.. ஒரு மினி தொடர்!
Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!
{{comments.comment}}