Kalaiyarasi Muthuvel Poem: சகிப்பு

Su.tha Arivalagan
May 14, 2026,04:40 PM IST

- கவி. கலை 


சத்தியம் பொய்க்கும் போதும் 

சத்தமிடாமல் சாந்தப்படுவது  

சகிப்பு. 

 

பெற்றாலும்  பெண்மையிணைப்  

போற்றாமல் , 

பொசுக்கிடும் போதும்        

பொறுமை காப்பது  

சகிப்பு. 

 

வேதனைகள்  வாட்டிடும் போதும் 

போதனையால் மனம் நிறைவது  

சகிப்பு. 


 


திறமைகளைத் திருடியபோதும்  

திண்ணமாய் திறந்த மனதுடன்                               

தினம்  நடப்பது  

சகிப்பு. 


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)