Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

Su.tha Arivalagan
Jun 10, 2026,05:06 PM IST

- கவி.கலை


இயற்கைத்தாய் 

காறி உமிழ்ந்தாலும் 

காகிதம் வீசினாலும்  

கண்ணீர் விடாமல்  

தண்ணீர் தருபவள், 

 

அமிலம் கொட்டினாலும்  

ஆழ்துளையிட்டாலும்  

ஆர்ப்பரிக்காமல்  

அமைதி காப்பவள், 

 

மரம் வெட்டினாலும்  

மண்ணைக் கெடுத்தாலும்  

மானுடம் வெறுக்காமல்  

மறுபிறவி எடுப்பவள்  


 


தன்னை அழித்தாலும்  

தனக்குரியதை எடுத்தாலும் 

தன்னலம் இல்லாமல்  

தரணி காப்பவள். 

 

இவளை மதிக்காமல் 

உலவும் மனிதருக்கும் 

இயன்றதைக் கொடுக்கும் 

இயற்கைத்தாய் அவள்.  


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)