கார்த்திகையில்!
Dec 04, 2025,04:00 PM IST
- கவிதா உடையப்பன்
வான் நட்சத்திரங்களை மண்ணில் கண்டேன்
வாசல் தோறும் வாய்மையடி!
விண்மீன்களைத் தொட்டேன்
விடைகள் கிடைத்தன விக்னங்கள் இன்றி!
கோலத்துடன் கதைத்தேன்
காலம் நின்று காத்ததடி!
வண்டுகள் என்னைச் சுற்ற
வாடாது நின்றேனடி!
உள்ளக் கூம்புகளை கொளுத்தினேன்
கள்ளக் கபடங்கள் ஒழிந்ததடி!
அகல் விளக்கினுள் திரிந்தேன்
அண்டமே அதுதானடி!
நாடிகளை ஒடுக்கினேன்
தேடி வந்ததடி "ஜோதி"!
நெய் உருகி தீபத்திற்கு துணை ஆனது
மெய் உருகி பிரம்மத்திற்கு இணை ஆனது!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)