கல்லறை தேடுகிறது!

Su.tha Arivalagan
Sep 15, 2025,01:02 PM IST

-  கவிஞர் வந்தை நளினி


கருவில் உன்னை சுமந்தாரோ 

கல்லறையில் உன்னை வைத்தாரோ


மடியில் நீ தவழ்ந்தாயோ 

மடிந்து நீ விழுந்தாயோ


கொஞ்சி பேசி மகிழ்ந்தாரோ 

கண்ணீர் சிந்தி....... 

கல்லறையில் உன்னை வைத்தாரோ   .


இரத்த துளிகளால் துள்ளினாயோ 

நாடி நரம்பு இழந்து துடித்தாயோ




நாவால் பலரை காயங்கள் ஆக்கினாயோ 

நலிந்து நீயும் கிடந்தாயோ   .


உறவை மதிக்க மறந்தாயோ 

உதவி இன்றி ஏங்கினாயோ   


தலைக்கனமாய் வாழ்ந்தாயோ

தளர்ந்து மண்ணில் சாய்ந்தாயோ  .


பச்சை மரமாய்  இருந்தாயோ 

பட்டு நீயும் போனாயோ  


வளர்ந்த செடியாய் உயர்ந்தாயோ 

வாடி நீயும் சாய்ந்தாயோ .


மன்னிக்க மறந்தாயோ

மனிதப் பண்பை மறந்தாயோ 


ஆறடி ஆழத்திலே

ஆறறிவும் அழிந்து போனதோ   


கல்லறை வரை மலர் தூவி 

உன்னை அழைத்துச் செல்வார் 

புதைத்தவுடன் விலகிச் செல்வார்  .


பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்

குடிசை வீடுகளில் உறங்கினாலும்

கடைசியில் உறங்குவது மண்ணில் தான்  .


கல்லறைக்குள் ஒரு நாள் வந்து விடுவாய் 

நீ வாழ்ந்த வாழ்க்கையை கடவுள் பார்த்து விடுவார்  .