- தீபா ராமானுஜம்
என் கருணை தெய்வமே!!
நான் உருவான போது உவகை அடைந்தாய்...
கருவான என்னை கண்களாய் காத்தாய்...
பிரியமாய் நீ உண்ட உணவையெல்லாம்...
பிள்ளை என் நலம் காக்க பிரியவும் துணிந்தாய்...
வேதனை தரும் வலிகளைப் பொறுத்தாய்...
வயிற்றில் நான் உதைத்தால் ஆனந்தம் கொண்டாய்...

ஐயிரண்டு மாதங்கள் அலுக்காமல் சுமந்தாய்...
நலமாக நான் பிறக்க அனைத்தையும் செய்தாய்...
நான் ஜனித்த நேரம் மறு ஜன்மம் கண்டாய்...
உயிர் பெற்று நான் வாழ உன் உதிரம் கொடுத்தாய்...
நான் பிறந்த பின்னாலும் எனக்காக உழைத்தாய்...
உணவுகளை மருந்துகளை தவறாது கொடுத்தாய்...
நான் வாழ பலவித தியாகங்கள் செய்தாய்...
நன்றியுடன் நான் உனக்கு எது செய்தாலும் ஈடாகுமா... என் தாயே!!!
இருந்தாலும் என் தாயை மகிழ்வுடன் வைக்க
என்னால் இயன்றதை செய்திடுவேன்...
இறைவனின் அருளோடு!!!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}