தாய்!!!

Sep 08, 2025,03:22 PM IST

- தீபா ராமானுஜம்


என் கருணை தெய்வமே!!


நான் உருவான போது உவகை அடைந்தாய்...


கருவான என்னை கண்களாய் காத்தாய்...


பிரியமாய் நீ உண்ட உணவையெல்லாம்...

பிள்ளை என் நலம் காக்க பிரியவும் துணிந்தாய்...


வேதனை தரும் வலிகளைப் பொறுத்தாய்...

வயிற்றில் நான் உதைத்தால் ஆனந்தம் கொண்டாய்...



ஐயிரண்டு மாதங்கள் அலுக்காமல் சுமந்தாய்...

நலமாக நான் பிறக்க அனைத்தையும் செய்தாய்...


நான் ஜனித்த நேரம் மறு ஜன்மம் கண்டாய்...

உயிர் பெற்று நான் வாழ உன் உதிரம் கொடுத்தாய்...


நான் பிறந்த பின்னாலும் எனக்காக உழைத்தாய்...

உணவுகளை மருந்துகளை தவறாது கொடுத்தாய்...


நான் வாழ பலவித தியாகங்கள் செய்தாய்...

நன்றியுடன் நான் உனக்கு எது செய்தாலும் ஈடாகுமா... என் தாயே!!!


இருந்தாலும் என் தாயை மகிழ்வுடன் வைக்க 

என்னால் இயன்றதை செய்திடுவேன்...

இறைவனின் அருளோடு!!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்