தாய்!!!

Sep 08, 2025,03:22 PM IST

- தீபா ராமானுஜம்


என் கருணை தெய்வமே!!


நான் உருவான போது உவகை அடைந்தாய்...


கருவான என்னை கண்களாய் காத்தாய்...


பிரியமாய் நீ உண்ட உணவையெல்லாம்...

பிள்ளை என் நலம் காக்க பிரியவும் துணிந்தாய்...


வேதனை தரும் வலிகளைப் பொறுத்தாய்...

வயிற்றில் நான் உதைத்தால் ஆனந்தம் கொண்டாய்...



ஐயிரண்டு மாதங்கள் அலுக்காமல் சுமந்தாய்...

நலமாக நான் பிறக்க அனைத்தையும் செய்தாய்...


நான் ஜனித்த நேரம் மறு ஜன்மம் கண்டாய்...

உயிர் பெற்று நான் வாழ உன் உதிரம் கொடுத்தாய்...


நான் பிறந்த பின்னாலும் எனக்காக உழைத்தாய்...

உணவுகளை மருந்துகளை தவறாது கொடுத்தாய்...


நான் வாழ பலவித தியாகங்கள் செய்தாய்...

நன்றியுடன் நான் உனக்கு எது செய்தாலும் ஈடாகுமா... என் தாயே!!!


இருந்தாலும் என் தாயை மகிழ்வுடன் வைக்க 

என்னால் இயன்றதை செய்திடுவேன்...

இறைவனின் அருளோடு!!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

news

உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை

அதிகம் பார்க்கும் செய்திகள்