தாய்!!!

Sep 08, 2025,03:22 PM IST

- தீபா ராமானுஜம்


என் கருணை தெய்வமே!!


நான் உருவான போது உவகை அடைந்தாய்...


கருவான என்னை கண்களாய் காத்தாய்...


பிரியமாய் நீ உண்ட உணவையெல்லாம்...

பிள்ளை என் நலம் காக்க பிரியவும் துணிந்தாய்...


வேதனை தரும் வலிகளைப் பொறுத்தாய்...

வயிற்றில் நான் உதைத்தால் ஆனந்தம் கொண்டாய்...



ஐயிரண்டு மாதங்கள் அலுக்காமல் சுமந்தாய்...

நலமாக நான் பிறக்க அனைத்தையும் செய்தாய்...


நான் ஜனித்த நேரம் மறு ஜன்மம் கண்டாய்...

உயிர் பெற்று நான் வாழ உன் உதிரம் கொடுத்தாய்...


நான் பிறந்த பின்னாலும் எனக்காக உழைத்தாய்...

உணவுகளை மருந்துகளை தவறாது கொடுத்தாய்...


நான் வாழ பலவித தியாகங்கள் செய்தாய்...

நன்றியுடன் நான் உனக்கு எது செய்தாலும் ஈடாகுமா... என் தாயே!!!


இருந்தாலும் என் தாயை மகிழ்வுடன் வைக்க 

என்னால் இயன்றதை செய்திடுவேன்...

இறைவனின் அருளோடு!!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்