காதலும் கற்று மற!

Su.tha Arivalagan
Feb 14, 2026,11:35 AM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி



கவிஞர் க.முருகேஸ்வரி எழுதிய காதலர் தின சிறப்பு கவிதை. 




காதலால் காதலுற்ற

காதலனைக்

காதலுடன் காதலிக்க 

காதல் தேடி காதல் கொண்டு 


காதலோடு காதலி சென்று

காதலும்‌ காதலுற்று

காதலியுடன் கைகோர்த்து நின்று

காதலனைக் காதலால் தின்று

காதல் செய்து காதல் வென்று

காதலால் காதலாகிக் காதலும் 

காதலுடன் காதலுள் கசிந்துருகிப் போகுமே...


ஆதலால்..

காதலில் மருகி

காதலால் உருகி

காதலைப் பருகி


காதல் வடித்து

காதல் படித்து

காதலைக் குடித்து


காதல் வரைந்து

காதலால் கரைந்து

காதலில் நனைந்து


காதல் ரசித்து

காதலை‌ ருசித்து

காதலில் வசித்து


காதலை சுவைத்து

காதலால் களைத்து

காதலில்‌‌ திளைத்து..


காதல் செய்வோம்

காதல் செய்வோம்.....


காதல் ஒன்றும் குற்றமில்லை ....


கால நேரம் கருதாமல் ...

சாக்கு போக்கு சொல்லாமல்....

பாவம் புண்ணியம் பார்க்காமல் ...

அபத்தம் கிபத்தம் 

என்று உளறாமல்...


காதலித்துப் பார்....

காதலுற்றுப் பார்

காதல் செய்து பார்

காதல் தோற்றுப் பார்...


காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை ...


வேண்டுமானால் 

கற்றுக் கொள்...


இல்லையேல் 

கற்று மற....


காதலும்‌ கற்ற மற....!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).