ஹோலி பண்டிகையை கொண்டாடுவோமா?.. எப்படி கொண்டாடுவது?

Su.tha Arivalagan
Mar 04, 2026,01:20 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்திM.Sc,B.Ed,B.A(Hindi)


ஹோலி பண்டிகையை கொண்டாடுவோமா?


எப்படி கொண்டாடுவது?


நம் வீடுகளில் வண்ணப் பொடிகளை வைத்து குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்வோம்.


ஹோலி என்பது நிறங்களின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.


ஹோலி பெரும்பாலும் மார்ச் மாதத்தில் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது.  இந்த திருவிழா வசந்த கால வருகையை வரவேற்பதற்காக கொண்டாடப்படுகிறது.  ஹோலி முன்நாள் “Holika Dahan” எனும் தீ விழா நடைபெறும்.

ஹோலி பண்டிகை தீமையின் மீது நன்மை வெல்வதை சுட்டிக்காட்டுகிறது. இந்த பண்டிகை Prahlada மற்றும் Holika பற்றிய புராணக் கதையுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.




மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணத் தூள் (குலால்) பூசி மகிழ்கிறார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறார்கள். பாரம்பரிய இனிப்புகள் தயாரித்து பகிர்ந்து கொள்வார்கள்.


சில இடங்களில் இசை, நடனம், விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பாக கொண்டாடுகிறார்கள். ஹோலி பண்டிகை சமத்துவம்  மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்தும் பண்டிகையாக கருதப்படுகிறது. 

பகைமைகளை மறந்து மன்னித்து இணைவதற்கான நாளாக கருதப்படுகிறது.


வடஇந்தியாவில் மிகப் பிரபலமாகவும், பிற மாநிலங்களிலும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஹோலியை சிறப்பாக கொண்டாடி மகிழ்ச்சியடைகிறார்கள்.


நாம் அனைவரும் நமது குழந்தைகளுடன் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம் . நாம் அனைத்து மதங்களையும்,அனைத்து இனங்களையும் சிறப்பாக கொண்டாடுவதோடு நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.


தலைமுறை தலைமுறையாக ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுவதற்கு நாம் வழிவகை செய்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)