இந்த நொடியில் வாழ்ந்து விடு

Su.tha Arivalagan
Dec 25, 2025,03:07 PM IST

- தி. மீரா


நேற்றின் சுமையை இறக்கி வை,

நாளையின் பயத்தை மறந்து விடு,


இப்போது துடிக்கும் இதயத் தாளம்

இதுவே வாழ்க்கை — உணர்ந்து விடு.

சிறு சிரிப்பில் சொர்க்கம் உண்டு,

ஒரு மூச்சில் உலகம் அடங்கும்,


கடிகார முள் ஓடும் முன்

இந்த நொடியை அணைத்துக் கொள்.

இழந்ததை எண்ணி வாடாதே,

இருப்பதை மதித்து நேசி,




திரும்பாத இந்தக் கணத்தில்

முழுமையாய் வாழ்ந்து விடு.


கண்ணீர் வந்தால் தடுத்து வைக்காதே,

அதுவும் ஒரு சுத்திகரிப்பு,

மகிழ்ச்சி வந்தால் தள்ளி வைக்காதே,

அதுவே வாழ்க்கையின் பரிசு.


மெதுவாய் நட, ஆழமாய் சுவாசி,

உன் உள்ளத்தை கேட்டு பார்,

இப்போது என்ற இந்தப் புள்ளியில்

நித்தியமும் மறைந்திருக்கிறது.


போகும் நேரம் போகட்டும்,

வரும் நேரம் வரட்டும்

இந்த நொடி உன் கையில் இருக்கையில்

வாழ்வை விழியால் அருந்து.


(முனைவர் பாவலர் தி.மீரா, ஈரோடு)