வீடு
Aug 01, 2026,04:08 PM IST
- மு.பாரதி
அன்பின் கூடு
நம் வாழ்வின் ஆலயம்
ஒற்றுமையின்
பிறப்பிடம்
பாசங்களை
பகிரும் இடம்
தேசங்களை
நேசிக்கும் இடம்
நற்பண்புகளை உருவாக்கும் இடம்
மரியாதையை
கற்றுக்கொடுக்கும்
இடம்
பகிர்ந்து உண்பதை எடுத்துரைக்கும்
இடம்
பல தலைமுறைகள்
தவழும் இடம்
ஊக்குவித்து
உயர வைக்கும்
இடம்
சந்தோஷங்களை
பெருக்கும்
இடம்
வருத்தங்களை குறைக்கும்
இடம்
வெற்றியை கொண்டாடும்
இடம்
நான்கு சுவர்
வாசல்
மண்
செங்கல்
வீடு அன்று
உயிர்
உறவுகளை நேசிப்போம்
இணைந்து
ஒன்றாய்
வாழ்வோம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64)