நட்பு

Su.tha Arivalagan
Apr 02, 2026,10:48 AM IST

- மு.பாரதி


கரும்பலகைக்கும்

சுண்ணாம்பு துண்டுகளுக்குமாம்

நட்பு 


கேள்வித் தாளுக்கும்

தேர்வுக்குமாம்

நட்பு 


மதிப்பெண்ணுக்கும்

மாணவனுக்குமாம்

நட்பு


வார்த்தைகளுக்கும்

கவிதைக்குமாம்

நட்பு 




பூவுக்கும்

வண்ணத்துப் பூச்சிக்குமாம் 

நட்பு 


மரங்களுக்கும்

காற்றுக்மாம்

நட்பு 


மேகக்கூட்டத்துக்கும்

மழைக்குமாம்

நட்பு 


வனத்துக்கும்

விலங்குக்குமாம்

நட்பு 


மண்ணுக்கும் குயவனுக்குமாம்

நட்பு


சிலைக்கும்

சிற்பிக்குமாம்

நட்பு 


கோடீஸ்வரனுக்கும்

பணத்திற்குமாம்

நட்பு 


ஏழைக்கும்

வறுமைக்குமாம்

நட்பு 


கடலுக்கும்

அலைக்குமாம்

நட்பு 


கனவுக்கும்

கற்பனைக்குமாம்

நட்பு 


நட்பு 

சிரிக்க வைக்கும் 


நட்பு 

சிந்திக்க வைக்கும் 


நட்பு 

உதவ வைக்கும்


நட்பு 

உணர வைக்கும் 


நட்பு 

மகிழ வைக்கும் 


நட்பு 

போராட வைக்கும் 


தோள் கொடுக்க நட்பு 

இருந்தால்


வானமும் வசப்படும் 


வாழ்க்கையும் 

வசந்தமாகும்


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)