- வே.ர. விஜயலட்சுமி
மிகச் சீரிய அளவில் மிஞ்சலாம் மனிதனை ...
மனித இயந்திரங்களின் பெரு முயற்சியால்
(மூளையை தன் பயன்பாட்டால்) இது நடந்திட
சாத்தியக்கூறுகளுண்டு......
ஏற்றி விடும் ஏணியல்லவோ மனிதனின் சிறந்த குணம்?
தனது செம்மையான செயற்பாட்டால்
நுண்ணிய கருவிகளையாக்கி
மென்பொருள் வன்பொருளென வகைப்படுத்தி
ஏற்புக்குரிய தரவுகளைத் தனித்தெடுத்துப்
பரிசீலித்து வகைப்பிரித்து
பாங்காய் தொகுத்தடுக்கி

ஒரு வகைக்கு பலநூறு
பொருத்தற் கூறுகளை ஆய்ந்தாய்ந்து
ஆங்காங்கே சிற்சில மாண்புகளோடு
மனித குலத்திற்கேற்ற மைல்கல்லாய்
படைத்தளிக்கும் படைப்பாளியே!!!!!!
விண்ணதிர் விஞ்ஞானியே!!!
நீவீர் வாழ்க,வாழ்க!!!
உமது படைப்புகள் ..
இயந்திர மனிதர்கள்...
மனிதத் திறத்தைக் காட்டிலும் மேம்பட்டு
மிஞ்சி செயல்படும் காலம் வெகு தூரத்தில் இல்லையே!!!!!
காரணம் சொல்லி விடவா நண்பனே!!!!
இதோ கேட்டுக் கொள்!!!!
மனிதத் தாயும் மனிதத் தந்தையும் பெற்ற குழந்தை அவன்.....
ஆதலினால் மனிதம் மேம்பட சாதனைகள் புரிந்திடுவான்!!!!!
(V.R. VIJAYALAKSHMI GRADUATE TEACHER, KANCHIPURAM DISTRICT, TAMILNADU)
"கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
Tamil Short Story: நிம்மதி
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
Short Story: கண்ணாளனே
வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதி: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஓடக்கரையில் நா இருக்க!
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி மிரட்டியதாக.. யூடியூபர் IPDS திருநாவுக்கரசு, 2 திமுகவினர்அதிரடி கைது
தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?
{{comments.comment}}