- வே.ர. விஜயலட்சுமி
மிகச் சீரிய அளவில் மிஞ்சலாம் மனிதனை ...
மனித இயந்திரங்களின் பெரு முயற்சியால்
(மூளையை தன் பயன்பாட்டால்) இது நடந்திட
சாத்தியக்கூறுகளுண்டு......
ஏற்றி விடும் ஏணியல்லவோ மனிதனின் சிறந்த குணம்?
தனது செம்மையான செயற்பாட்டால்
நுண்ணிய கருவிகளையாக்கி
மென்பொருள் வன்பொருளென வகைப்படுத்தி
ஏற்புக்குரிய தரவுகளைத் தனித்தெடுத்துப்
பரிசீலித்து வகைப்பிரித்து
பாங்காய் தொகுத்தடுக்கி

ஒரு வகைக்கு பலநூறு
பொருத்தற் கூறுகளை ஆய்ந்தாய்ந்து
ஆங்காங்கே சிற்சில மாண்புகளோடு
மனித குலத்திற்கேற்ற மைல்கல்லாய்
படைத்தளிக்கும் படைப்பாளியே!!!!!!
விண்ணதிர் விஞ்ஞானியே!!!
நீவீர் வாழ்க,வாழ்க!!!
உமது படைப்புகள் ..
இயந்திர மனிதர்கள்...
மனிதத் திறத்தைக் காட்டிலும் மேம்பட்டு
மிஞ்சி செயல்படும் காலம் வெகு தூரத்தில் இல்லையே!!!!!
காரணம் சொல்லி விடவா நண்பனே!!!!
இதோ கேட்டுக் கொள்!!!!
மனிதத் தாயும் மனிதத் தந்தையும் பெற்ற குழந்தை அவன்.....
ஆதலினால் மனிதம் மேம்பட சாதனைகள் புரிந்திடுவான்!!!!!
(V.R. VIJAYALAKSHMI GRADUATE TEACHER, KANCHIPURAM DISTRICT, TAMILNADU)
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
{{comments.comment}}