ஓடக்கரையில் நா இருக்க!

Jul 02, 2026,10:16 AM IST

- கவிஞர் பிஎஸ் முருகேசன்


ஓடக்கரையில் நா இருக்க -பெண்ணே

ஒதுங்கி நின்னு பாக்கலாமா?

தெரியாதது போல நா இருந்து-கண்ணே

காதலிக்கிறேன் மெய் மறந்து


பூப்போல இதழ்களை -நல்ல

அழகாக நீயும் விரிக்கிறே

புன்னகை -மிளிர -மெல்ல

விழிதனை கொஞ்சம் அசைக்கிறே


துள்ளித் தெரியும் -புள்ளி

மான் நீ தானே

தொரத்திப் -பிடிக்கும் -கில்லி

நான் தானே  


மாலை பொழுது -மஞ்ச

வேலையிலே

மயில்கள் வந்து -கொஞ்ச

ஆடுது சோலையிலே




இருமனம் இனஞ்சா -நமக்கு

கொண்டாட்டம்

இல்லேன்னா - பிணக்கு 

இங்கே திண்டாட்டம்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்