அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்

Aug 17, 2026,01:16 PM IST

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் எழுப்பிய சுட்டிக்காட்டலைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவை முன்னிலையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.


கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் காரசாரம் :


சட்டமன்ற விவாதத்தின் போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும், எதிர்கால ஆட்சி மாற்றம் குறித்தும் காட்டமாகப் பேசினார்.ஆட்சி மாற்றம் குறித்த பேச்சு: "மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வரும்; அதற்கு நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது" என்று பேரவையில் குறிப்பிட்டார்.


ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை: 




"அப்பாவை காணோம் என்று சொல்கிறீர்கள்.. அவர் வருகின்ற நேரத்தில் நீங்கள் பல பேர் இங்கே இருக்க மாட்டீர்கள்; நாங்கள் இருப்போம்" என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.அமைச்சரவையைச் சேர்ந்த ஒரு அமைச்சர், திமுக தலைவரின் பெயரைப் குறிப்பிட்டுப் பேசிய விதம் சரியான நடைமுறை அல்ல என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவையில் சுட்டிக்காட்டினார்.


முதலமைச்சர் விஜய் மன்னிப்பு :

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உடனடியாக குறுக்கிட்டுப் பேசினார்."திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான்" என்று ஒப்புக்கொண்டார். "அமைச்சர் சார்பாக நான் 'Sorry' கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.


சட்டசபை விவாதத்தின் போது பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித் குமார், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பெயரை குறிப்பிட்டும் பேசினார். இதை திமுக உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியதால், அவையில் முன்னாள் முதல்வர் என்று தான் குறிப்பிட வேண்டும் என்ற மரபு உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட முதல்வர் விஜய், அது தவறு தான் என பதிலளித்ததுடன், அவருக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்

news

உலகத்தின் முதல் மொழி அம்மா

news

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு

news

வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்

news

அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்

news

ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!

news

கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி

news

Travel story: ஏழு வருடங்கள் போதாது.. அந்த 7 நாள் அனுபவத்தைச் சொல்ல.. ஒரு மினி தொடர்!

news

Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்