அப்பா கண்ணாடி!

Jul 01, 2026,04:49 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


என் அப்பா எனக்கு 

அப்பா மட்டும் அல்ல!

எனக்குப் பத்தாம் வகுப்பு வரைத் 

தமிழ் ஆசிரியரும் கூட! 


அப்பாவைக் 

கண்ணிலே 

கண்ணாடியோடும் 

கையிலே பிரம்போடும்


பார்க்கும் போது

மொத்த வகுப்பும் 

கப்சிப் என்று 

இருக்கும்! 




கண்ணில் கண்ணாடி போட்டுப்

பாடம் நடத்தும் போது 

கம்பீரமாகத்

தெரிவார்! 


பள்ளியிலே 

அப்பாவை

Sir என்று தான் 

அழைப்பேன் !


காந்திக்கு ஒரு 

கண்ணாடி போல் 

என் அப்பாவிற்கும் 

கண்ணாடி அழகுதான்! 


இன்று அவர் 

கண்ணாடி

இருக்கிறது! 

ஆனால் அவர் இல்லை!


கடந்த 15 வருடங்களாக 

அவரது கண்ணாடியை 

மட்டுமே நாங்கள்

பார்த்துக்கொண்டு 


கண்ணில் 

கண்ணீருடனும்

நெஞ்சில் 

நினைவுகளோடும்


அவரை நினைத்துக் 

கொண்டு 

நகர்கிறது 

நாட்கள்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???

news

தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!

news

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

news

அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

news

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

news

போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!

news

இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!

news

சுதந்திரம் எனும் ஒளி

news

சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?

அதிகம் பார்க்கும் செய்திகள்