அப்பா கண்ணாடி!

Jul 01, 2026,10:25 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


என் அப்பா எனக்கு 

அப்பா மட்டும் அல்ல!

எனக்குப் பத்தாம் வகுப்பு வரைத் 

தமிழ் ஆசிரியரும் கூட! 


அப்பாவைக் 

கண்ணிலே 

கண்ணாடியோடும் 

கையிலே பிரம்போடும்


பார்க்கும் போது

மொத்த வகுப்பும் 

கப்சிப் என்று 

இருக்கும்! 




கண்ணில் கண்ணாடி போட்டுப்

பாடம் நடத்தும் போது 

கம்பீரமாகத்

தெரிவார்! 


பள்ளியிலே 

அப்பாவை

Sir என்று தான் 

அழைப்பேன் !


காந்திக்கு ஒரு 

கண்ணாடி போல் 

என் அப்பாவிற்கும் 

கண்ணாடி அழகுதான்! 


இன்று அவர் 

கண்ணாடி

இருக்கிறது! 

ஆனால் அவர் இல்லை!


கடந்த 15 வருடங்களாக 

அவரது கண்ணாடியை 

மட்டுமே நாங்கள்

பார்த்துக்கொண்டு 


கண்ணில் 

கண்ணீருடனும்

நெஞ்சில் 

நினைவுகளோடும்


அவரை நினைத்துக் 

கொண்டு 

நகர்கிறது 

நாட்கள்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?

news

அப்பா கண்ணாடி!

news

My Mom .. என் அம்மா!

news

Vaiko gets angry: ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?

news

அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

news

அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?

news

அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

news

வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி

அதிகம் பார்க்கும் செய்திகள்