- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
பாரத பூமி
புண்ணிய பூமி!
நாம் அதில் பிறந்ததில்
அகம் மகிழ்வு அதிகம்!
இன்று கண்டேன்!
சுதந்திர சுவாசம்!
ஆனது அதுவே எந்தன்
மகிழ்ச்சிக் கவசம்!
பொன் ஏடும் காணாத
காவியமோ பாரதம்!
போர் இல்லா உலகைத் தேடும்
புவி மகளோ பாரதம்!

பன்னீரின் வாசம்
நமைச் சுற்றியோ!
பாரதத்தில் பிறந்தது
செய்திட்ட புண்ணியமோ!
இது கண்ணீரே காணாத
பாரத தேசமோ! இனி
எத்தனை பிறவி எடுத்தாலும்
இங்கேயே பிறப்போமோ!
இது இறைவனும் விரும்புகிற
இந்திய நாடோ!
இனி வேறு என்ன வேண்டும்
நமக்கு இது வீடோ!
வருங்காலம் நமதென்று
வாழ்வோமே!
வசந்தங்கள் வாழ்த்துக் கூறும்
நிம்மதி தான் நிச்சயமே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
எனது பார்வையில் சுதந்திரம்
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
{{comments.comment}}