நினைவு ஒரு இனிமை!

Su.tha Arivalagan
Jul 30, 2026,10:23 AM IST

- மா. திவ்யா, நாகப்பட்டினம்


நினைவு ஒரு இனிமை!

அது தரும் ஒரு தனிமை!

நாமெல்லாம் அதற்கு அடிமை!

உண்மை உணரப்படும்!

நன்மை விளையும்!

வளமை பெருகும்!

இளமை மெருகேறும்!

சிறுமை தனியும்!

பெருமை பேசப்படும்!

உரிமை கேட்கப்படும்!

புதுமை புகுத்தப்படும்!

வாழ்வு செம்மைப்படும்!!!




கடமை உணரப்படும்!

பொறுமை போற்றப்படும்!

அருமை புரியவரும்!

அன்பு விதைக்கப்படும்!

நம்பிக்கை துளிர்க்கும்!

துன்பம் மறைந்துவிடும்!

புன்னகை நிலைத்துவிடும்!

கனவுகள் மெய்ப்படும்!

நாளை நமதாகும்!

வையகம் வியந்துநிற்கும்!

வாழ்வு மலர்ந்துவிடும்!!!


(நாகப்பட்டினத்தை சேர்ந்த கவிஞர் மா. திவ்யா M.Sc., படித்திருக்கிறார். கீழ்வேளூர் வட்டாரத்தில் சிறகுகள் தொண்டு நிறுவனத்தில் (மாற்றுத்திறனாளி நலத்துறை) பணியாற்றுகிறார். மேடைப்பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், பல பேச்சுப் போட்டிகளில் வென்றுள்ளார். ராஜ் டிவி, ஆனந்த விகடன் நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்)