எண்ணங்களை வண்ணமாக்கி.. தூரிகையின் சாரலிலே.. விழி வியக்க வைத்து!
Apr 17, 2026,02:42 PM IST
- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
எண்ணங்களை
வண்ணமாக்கி.....
தூரிகையின்
சாரலிலே.......
விழி வியக்க வைத்து....
கடவுளர்கள் அனைவரையும்......
கண்கள் முன்னே
நிறுத்தி.....
காட்சிகள்
அத்தனையும்......
காவியத்தில்
வடித்து......
சித்திரங்கள்
வடிவமதை.....
சிந்தையிலே
பதித்து......
கானகத்தின்
காட்சிகளும்.....
புராண
இதிகாசங்களும்......
தூரிகையின் துளி முனையில் பொருத்தி....
துன்பமெல்லாம்
துடைத்து.....
வண்ண வண்ண
ஓவியமாய்......
இதயத்திலே
பதித்து.......
கலைகளிலே சிறப்பு
செய்து.....
வீட்டிலொரு
ரவிவர்மா.....
கலைஞர்களை வாழ்த்தி.....
சிரம் தாழ்த்தி
மகிழ்ந்திருப்போம்.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)