அன்பென்றாலே அப்பா
- சிவ.ஆ.மலர்விழி ராஜா
அழகான கவிதை அப்பா....
அடுக்கடுகாய் சுமைகள் பல வந்தாலும்
தளராத உழைப்பினால்
தன் நலன் பார்க்காத அப்பா....
குடும்பத்தின் வறுமையை வென்றிடவே.....
இல்லறம் துறந்து கடல் கடந்து,......
இளமை வாழ்வை இதயத்தில் மறைத்து......
தனது
இளமை வாழ்வை இதயத்தில் மறைத்து.....
உறவுகளையும்
பிரிந்து......
உறக்கத்தையும்
மறந்து...
உழைப்பே உயர்வென
உள்ளம் நெகிழ்ந்து..,....
பிள்ளைகள் வளர்ச்சியை
கண்ணில் காணாமல்....
கடமையை செய்தவர்
அப்பா......
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்து....
பிள்ளைகள் வாழ்வை தோளில் சுமந்து......
சுமை தாங்கியாக
சுதந்திரம் இழந்து.....
தளரும் போதெல்லாம்
தாங்கி பிடித்தவர் அப்பா.....
நாம்......
மனம் தளரும்
போதெல்லாம் தாங்கிப் பிடித்தவர் அப்பா....
தனக்கென தேவையை உணர்ந்தவர் இல்லை.....
ஆடையை மனம் போல்
அணிந்தவரில்லை.....
தன் நலன் என எதுவும்
அறிந்ததும் இல்லை....
வலிகள் நிறைந்து
சுமைகள் பல தந்தாலும்.....
வயதும் கடந்து ஒடுங்கி
நின்றாலும்.......
தெய்வத்தை தேடி
நாம் சென்றாலும்.....
தெய்வமாக துணை
வருவதும் அப்பா.....
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)