May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி மோகன்
காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து...
காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து !
மலர் பறிப்பதும் உன் கரங்கள் தான்!
மலையைப் பொடியாக்குவதும் உன் கரங்கள் தான்!
ஏற்றம் தரும் உழைப்பின் தித்திப்பு அது உழைப்பவருக்கு மட்டுமே முத்தாய்ப்பு !
சோம்பல் எனும் இருளைத் துரத்தி நீயும்
சாதனை எனும் ஒளியைத் தேடு !
பெற்றோர் இட்ட பெயரை விட நம் உழைப்பால் பெறும் பெயரே உயர்வு தரும்!
உழைப்பு என்பது சுமையல்ல ... நம் ஆன்மா தேடும் நல் வாழ்வின் அடையாளம்!
தன்னம்பிக்கை எனும் விதையைத் தூவி
தன்னிகரற்ற வெற்றியை அறுவடை செய் ! கைரேகைகள் அழிந்தாலும் கவலையில்லை! நம் உழைப்பின் சரித்திரம் ஒரு போதும் அழியாது !
விதியை நம்பி விழிமூடித் தூங்காதே...
மதி கொண்டு உழைத்தால் ....
மண்ணைத் தோண்டிப் பொன்னை எடுக்கும் உழைப்பின் வலிமை உனக்கே தெரியும்!
விடியல் உன் வாசலில் காத்திருக்க ....
உழைப்பின் பெருமை உனக்கே அருமை
உனக்கே அருமை !!!
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).