மயக்கமும் தயக்கமும்

Su.tha Arivalagan
Jun 24, 2026,12:11 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


தென்னங் கள் உண்ண

மயக்கம் வரும்


உன் 

கண்ணங் கருவிழியோ  

கிறக்கம் தரும்


அன்ன நடை அழகில்

அசத்தும் தினம்


பின்னும் இடை நெளிந்து  வருத்தும் மனம்


கூந்தலிலே சாதி மல்லி  ஏந்தச்சொல்லி

எனை அழைக்கும்


கிட்ட வந்து தொட்டாலே உயிரது

பிழைக்கும்




கொவ்வை இதழ் இரண்டு செம்மைக்

கவி படிக்கும்


இளமைக்கு ஊஞ்சலாடும் எந்தன்

மனம் துடிக்கும்


பாதக் கொலுசின் ஒலி

நாதக் குழல் இசைக்கும்


காதல் சொல்லச் சொல்லி காளை நெஞ்சம் விரட்டும்


இன்று சொல்லவா வேண்டாம்

நாளை சொல்லவா


என்று சொல்வேன் தயக்கமும் எனக்குள்

அல்லவா