கவிஞர்களின் கனிவான கவனத்திற்கு!

Su.tha Arivalagan
Jun 19, 2026,12:14 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


மரபுக்கவிதை என்று ஒன்றுண்டு ...

அக் கவிதைக்கோர் மரபும் உண்டு


யாப்பின் இலக்கணம் பொருந்தியே ...

எழுதிட அது தான் மரபுமே...


இலக்கண விதியோடு

உன் கற்பனை வளமும்...

உணர்ச்சிப் பெருக்கும் கலந்திட்டால் 

அது அமிர்தமே...


எழுத்து அசை சீர் தளை அடி தொடை இவற்றோடு...

இனிமையான ஓசை நயம் கூட்டி..

சந்தங்களோடு சிந்து பாடுவதே....

மரபுக் கவிதை என்று ஆகுமே...




எதுகை மோனை வார்த்தைகளோடு..

ஒத்த ஓசை சொற்களையும்

ஒருங்கே‌ கவிதையில் கொண்டு வந்து ...

மரபுக் கவிதை புனைவோமே...

கவிதையின் மரபு காப்போமே...


கவிஞர்கள் நமக்கும் இதில் பொறுப்புண்டு..

இப்படியான கவிதைகள் அதிகம் படைத்தால் 

மரபுக் கவிதைக்கு சிறப்புண்டு..,


மரபுக் கவிதை என்று ஒன்று உண்டு ...

கவிதைக்கோர் மரபும் உண்டு...!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).