அவளே அன்னையாய்.... அவளே திருமகளாய்... அவளே ஆக்கமுமாய்.... அவளே அனைத்துமாய்...!
- ந.தீபலட்சுமி
மாதவம் செய்திட வேண்டுமம்மா....
மாதவம் செய்திட வேண்டுமம்மா....
பெண்ணாய் பிறந்திட
நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...
அவளே அன்னையாய்....
அவளே திருமகளாய்...
அவளே ஆக்கமுமாய்....
அவளே அனைத்துமாய்...
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே.....!
அவளே அதிசயமாய்...
அவளே பிரகாசமாய்....
அவளே அணுத்துகளாய்....
அவளே சக்தி மயமாய்....
பெண்ணே...
நீ ஒரு சகாப்தமே .....
அவளே உலகை ஆள வருவாள்
அறியாமை என்னும் இருளை நீக்குவாள்
உலகம் முழுவதும் அன்பை விதைப்பாள்
அவளே அறிவுச்சுடரை ஏற்றுவாள்.....
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே....
எந்தத் துறையிலும் உனக்கு விலக்கில்லை...
உன் வெற்றிக்கு எதிலும் எல்லை இல்லை....
உன் பொறுமைக்கு என்றும் முடிவில்லை...
உன் வீரத்திற்கு என்றும் வீழ்ச்சி இல்லை...
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே....
மகளிர் தினத்தில் உன்னை கொண்டாடலாம்
பின்னர் நீயே திண்டாடலாம்
உனக்குள் இருக்கும் சக்தியை
வெளியே நீயும் கொண்டு வந்தால்
உலகை நீயே உன் கைக்குள் அடக்கலாம்...
பெண்ணே...
நீ ஒரு சகாப்தமே....
உன்னை போற்றிட இந்த ஒரு நாள் போதாது...
நித்தம் நித்தம் நீயே வளர்கிறாய்
உனக்கு முடிவென்பது எது?
முடிந்தால் உலகில் உயிர்கள் ஏது??
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே...
நீ ஒரு சகாப்தமே.
(ந . தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியை, அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)