புரட்சிப் புயலாய் எழுந்திடு பெண்ணே!

Mar 06, 2026,02:41 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


பொந்துக்குள் நண்டாகப்

புதைந்து இருந்தாய்.

பொறுமைக்கு கடலாக வாழ்ந்து இருந்தாய்.

ஆழிக்குள் முத்தென அமிழ்ந்து இருந்தாய்.

ஆமை போல் உனக்குள் அடங்கி இருந்தாய்.


அடுக்களை வாழ்வில் மூழ்கி கிடந்தாய்.

அடிமை த்தனத்தில் வாடிக் கிடந்தாய்.

சிறைக்குள் கிளியாய் சிக்கிக் கிடந்தாய்.

சிமினிக்குள் ஒளியாய் மறைந்து கிடந்தாய்.




ஆழிக்குள் மூழ்கிய ஆதவன் வான் 

அரியணை ஏறி வருவதை போல

புரட்சிப் புயலாய் புறப்படு பெண்ணே

புது உலகம் படைக்க

உருவடு பெண்ணே..


அடிக்கும் கோளுக்கு அஞ்சாத அரவமாய். வெடிக்கும் புரட்சியில் வீறு கொண்ட ஜான்சியும்.

இந்தியாவை காத்திட ஈரெட்டு குண்டுகளை இதயத்தில் தாங்கிய இந்திரா தாயும்.

 வெள்ளையனை எதிர்த்த வெந்தனல் வேலுநாச்சியும்

விண்வெளி ஆய்வில்

வெற்றி கண்ட

கல்பனா சாவ்லாவும்.

உஹது போருக்கு உவந்தே சென்ற

உத்தம நபி  மனைவி ஆயிஷாவும்.


சாதித்த பெண்களின்

சாதனைகள்எல்லாம். சரித்திரம் காட்டும் கோடானு கோடி

பூக்கள் எல்லாம் புதுமையை படைத்திட

பெண் வாசம் வீசிடும் பூமி.


(இரா.மும்தாஜ் பேகம், திருச்சி, தமிழ்நாடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்