நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!
நவராத்திரியின் 8ம் நாள் என்பது கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்குரிய 2வது நாளாகும். இவளே ஞானத்தை அருளக் கூடிய தேவியாகவும் கருதப்படுகிறாள். ஒருவருக்கு ஞானம் கிடைத்து விட்டால் அவருக்கு தானாக வெற்றி கிடைத்து விடும் என்பதை உணர்த்துவதற்காக தான், நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபட்டு நிறைவு செய்த மறுநாள் விஜயதசமி திருநாள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 8ம் நாள் சரஸ்வதி தேவியை எப்படி வழிபட வேண்டும், என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அம்பிகையின் பெயர் - நரசிம்ம தாரிணி
கோலம் - பத்ம வகை கோலம்
மலர் - ரோஜா
இலை - மருதாணி
நைவேத்தியம் - பால் சாதம்
சுண்டல் - மொச்சைப் பயறு சுண்டல்
பழம் - திராட்சை பழம்
ராகம் - புன்னகவராளி
நிறம் - பச்சை / அரக்கு
மூல மந்திரம் :
"உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம்
பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்"
காயத்ரி மந்திரம்:
"ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்"