- ஸ்வர்ணலட்சுமி
சரஸ்வதி தேவி, நவராத்திரி விழாவில் முக்கிய தெய்வமாகும். கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம் சரஸ்வதி தேவி ஆவார். "சரஸ்வதி "என்கிற பெயர் சமஸ்கிருத வார்த்தையான "சரசு+ அதி" இவற்றின் கூட்டுச்சொல் ஆகும். இதன் பொருள் "சரசு" என்றால் 'நிறைய தண்ணீர்' என்றும் "அதி "என்பது 'கொண்டவள் 'என்றும் பொருள் படுகிறது. இதற்கு நிறைய நீர் கொண்டவள் என்று பொருள்.
சரஸ்வதி தேவியின் உருவகம் நான்கு கைகளை கொண்டவராகவும், வெள்ளை ஆடை உடுத்தி, வெண் தாமரையில் அமர்ந்தவராகவும், ஒரு கையில் ஜெபமாலையும் மற்றொரு கையில் ஏட்டுச்சு வடியையும் இரு கைகளில் வீணை மீட்டுபவராகவும் திகழ்கிறாள்.
நவராத்திரி பண்டிகையின் போது மூல நட்சத்திரத்தன்று சரஸ்வதி தேவி அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாள் சரஸ்வதி தேவியை பூஜிப்பது மிகவும் விசேஷமானது. சரஸ்வதி தேவிக்கு வேறு சில பெயர்களும் உண்டு. கலைமகள், வாணிதேவி, கலைவாணி, பாரதி,சாரதா, வீணாவதி, ஹம்சவாகினி,புத்தி தாத்திரி மற்றும் பிரம்மச்சாரிணி ஆகியவை அடங்கும். இதில் சரஸ்வதி என்கிற பெயரே 'பாயும் ஓடை' அல்லது 'நதி 'என பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. கலைமகள் என்பது கலைகளின் தெய்வமாக திகழ்வதால் இந்த பெயரால் அழைக்கப்படுகிறாள். வாணி அல்லது வாணி தேவி, பாரதிஎன்பது பேச்சின் தெய்வம், ஞானத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். "வீணாவதி "என்பது வீணையை ஏந்தி இருப்பதால் இந்த பெயர் வந்தது.

" புத்தி தாத்திரி" என்பது அறிவு புத்தியை கொடுப்பவள். "சாரதா "நவராத்திரியில் அழைக்கும் பெயர். "ஹம்ச வாகினி" என்பது அன்னப்பறவையின் மீது அமர்ந்திருப்பதால் இந்த பெயரால் அழைக்கப்படுகிறாள். "பிரம்மச்சாரிணி" என்பது சரஸ்வதியின் வேறு பெயர்களில் ஒன்று. மேலும் தூ யாள், பிராமி, சியாமளா,வரதாயினி புவனேஸ்வரி, ஞான வாகினி என்னும் பெயர்களாலும் சரஸ்வதி தேவி அழைக்கப்படுகிறாள்.
சரஸ்வதி தேவி தோன்றிய தினமாக " வசந்த பஞ்சமி" கருதப்படுகிறது.இந்த நாளில் சரஸ்வதி தேவி வழிபடுவது ஞானத்தை மேம்படுத்தும். நவராத்திரி பண்டிகையின் போது கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி வழிபாட்டிற்கு உகந்தவை. சரஸ்வதி தேவி கைகளில் வைத்திருக்கும் வீணைக்கு "கச்ச பீ" என்று பெயர். இந்த வீணைக்கு ஒரு வரலாறும் இருக்கிறது. முதலில் சிவபெருமானால் பிரம்மனுக்கு இந்த வீணை அளிக்கப்பட்டு, பின் பிரம்மனால் சரஸ்வதி தேவிக்கு கொடுக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன.
கலைகளுக்கெல்லாம் அரசி சரஸ்வதி தேவி. கலைமகளும் இவளே. "கலைமகள் "என்ற சொல்லுக்கு 'கலைகளின் மகள் 'அல்லது 'கலைகளின் தெய்வம்' என்று பொருள். இவள் அனைத்து கலைகளையும், கல்வியையும், ஞானத்தையும் அருளும் தெய்வமாக திகழ்கிறாள். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாக சரஸ்வதி தேவி கருதப்படுகிறார்.சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட கல்வி, ஞானம், கலை,வாக்கு மற்றும் பகுத்தறிவு ஆகியவை அனைவருக்கும் கிட்டும். பொன்மகள்,வாணி, கலைவாணி,இயன் மகள் என்கிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள்.
படிக்கும் குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவியின் ஸ்லோகங்களை கற்றுத் தந்து அன்றாடம் கூறி வர அவர்களுக்கு சிறந்த ஞானமும்,கல்வி அறிவும் கிட்டும்.
சரஸ்வதி ஸ்லோகம் :
"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்தர் பவத்துமே சதா "
இதன் பொருள்: வேண்டிய வரங்களைத் தரும் விருப்பமான வடிவங்களை உடைய சரஸ்வதி தேவியே, உனக்கு நமஸ்காரம். நான் கல்வி கற்க தொடங்குகிறேன். அனைத்து செயல்களிலும் வெற்றி எனக்கு எப்போதும் உண்டாக வேண்டும். இந்த ஸ்லோகத்தை அன்றாடம் மாணவர்கள் கூறும் பொழுது அவர்களுடைய நினைவாற்றல் பெருகி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.இந்த ஸ்லோகத்தை தினமும் காலை,மாலை இருவேளையில் பாராயணம் செய்வது அதீத நன்மை பயக்கும்.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி
ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
{{comments.comment}}