நவம்பர் எனக்கே என்று சொன்னதாம் மழை.. டிசம்பர் மட்டும் இளைப்பா என்ன!!
- அ.சீ. லாவண்யா
கைக்குள் கோப்பை தேநீர்,
வெளியில் நனைந்து வரும் மழை வாசம்-
இரண்டு மணமும் ஒரு சேர மணக்கும்!
மே மாத காலத்தில் வரும் கோடை விடுமுறையை வென்று விடுகிறது
இந்த நவம்பர் மாத மழை விடுமுறை!
80ஸ் 90ஸ் பாடல்கள் வானொலியில் ஒலிக்க, நிலத்திலே விழும் ஒவ்வொரு துளியும் ஒரு ராக தாளமாய் மாறும்!
இது ஒரு வருடம் தேக்கி வைத்திருந்த பாரம்..
மண்ணில் ஒரே மாதத்தில் மழையாய் பெய்து தீர்த்து விடுகின்றது மேகம்
மழையோ மேகத்தை பிரிந்த துயரத்தில் கீழே விழுகிறதாம்
எப்போது உன்னை பார்ப்பேன் என்று !
மண்ணின் முதல் மனம்
காற்றின் ஓசை
பறவைகளின் ஒலிகளை
வைத்து கண்டுபிடித்திடலாம்
ஒ.. நம்மை மகிழ்விக்க
மழை வருகை என்று!
நிம்மதியாக சும்மா அமர்ந்திருக்கும்
அந்த அமைதி எல்லாம் நவம்பர் மாதத்துக்கே சொந்தம் என்று!
நவம்பருக்கே சொந்தமாம் இந்த வரமான மழை
ஆனால் அகம்பாவம் பிடித்த நவம்பரே
உனக்கு மட்டுமா அது சொந்தம்
இதோ எனக்கும்தான் அது பந்தம் என்று..
கட்டியம் கூறியபடி 1ம் தேதியே வந்து
நிற்காமல் ஊற்றி உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறது டிசம்பர்!
மழை என்பது ஒரு பருவம் அல்ல, ஒரு உணர்வு!
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)