கள்ளக்குறிச்சியை நடுங்க வைத்த புயல் அனுபவம்.. மறக்க முடியாத பெஞ்சல்!

Dec 01, 2025,04:56 PM IST

- சுமதி சிவக்குமார்


சென்ற ஆண்டு 2024 ல் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட துயரம் உங்களுடன் பகிர்கிறேன்.


நான் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூங்கில்துறைப்பட்டு கிராமம். 1972ல் கட்டப்பட்டு 1977ல் முதல் கரும்பு அரவை செய்யப்பட்டது தான் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை. 


1972ல் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் இருந்த இந்த ஊரில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து பாலத்தின் நான்கு புறங்களிலும் தூண்கள் எழுப்பி அதன் முனையில் நமது அசோக சக்கரமும் அதன் மேல் நான்கு முக சிங்கமும் பொறிக்கப்பட்டது. 


1972 இல் வந்த வெள்ளத்தில் அந்த சிங்க முகம் தலை மட்டும் வெளியில் தெரிந்ததாக என் முன்னோர் கூறினார்கள். அந்தளவுக்கு வெள்ளம் வந்ததாம். 




அதன் பிறகு அந்த ஆற்றில் பாலத்துக்கு கீழே தான் தண்ணீர் போனது நானும் பலமுறை பார்த்திருக்கிறேன்.ஆனால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பாலத்தை ஒட்டி சென்ற தண்ணீர் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்திலும் திருவண்ணாமலை சாத்தனூர் டேம் சுமார் 13,000 அடி நீர் திறந்து விட்டதால் ஏற்பட்ட வெள்ளத்திலும் எனது ஊரில் கரையோரத்தில் வசித்த மக்களின் வீடுகள், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.


உபயோகப் பொருட்கள் துணிமணிகள் சிலிண்டர் தட்டுமுட்டு சாமான்கள் நாற்காலிகள் என அத்தனையும் அடித்து செல்லப்பட்டன. பல முக்கிய பத்திரங்கள் கூட நனைந்து விட்டன. 


பாதிக்கப்பட்ட அனைவரும் சர்க்கரை ஆலை சமுதாய கூடத்திலும் திருமண மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு  தேவையானவற்றை அனைத்து வணிகர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், சங்கம் அரிமா, இளைஞர் சங்கம் சார்பில் உணவுகள் துணிமணிகள் போர்வை, பாய், தலையணை என கொடுத்து மூன்று நாட்கள் பாதுகாத்தனர். 


டிசம்பர் 12 அன்று, என்னுடன்படித்த நண்பர் திலீப்குமார் அவர்கள் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். அவரும் அவருடன் இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆற்றங்கரையோரம் இருந்த மின்மோட்டாரை பழுது பார்க்க மின்கம்பிகளை எடுத்து செல்லும் போது சேறும் சகதியமாக இருந்த இடத்தில் கால் வைத்தால் தவறி ஆற்றின் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்கள். இரு நண்பர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் திலீப்குமாரின் கதி என்னவென்று தெரியாத நிலையில் நாங்கள்.


என் நண்பரை கண்டுபிடிக்க பட்டபாடு மற்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று அவரது குடும்பமும் அந்த ஊரும் அடைந்த சோகம் சொல்லி மாளாது.  அவர் உயிருடன் வர வேண்டி இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அவரவர் தெய்வங்களை வேண்டி அவரவர் வழிபாடு நடத்தினர். 


இதை கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. எனது ஊரிலிருந்து திருமணமாகி மற்றும் பிழைப்புக்காக வெளியூர் வெளிநாடு வந்தவர்கள் என்று எல்லோரும் கடவுளிடம் வேண்டினோம். 


ஆனால் மூன்று நாட்கள் கழித்து திருக்கோவிலூர் அருகே ஆற்றின் கரையோரம் அவரது உடல் ஒதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து ஊரே கதறி அழுதது என்னால் இன்றும் மறக்க இயலவில்லை.


இம்மாதிரியான நிகழ்வு இனியும் எங்கும் வேண்டாம் என மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

news

எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்