ஓடக்கரையில் நா இருக்க!
Jul 02, 2026,10:16 AM IST
- கவிஞர் பிஎஸ் முருகேசன்
ஓடக்கரையில் நா இருக்க -பெண்ணே
ஒதுங்கி நின்னு பாக்கலாமா?
தெரியாதது போல நா இருந்து-கண்ணே
காதலிக்கிறேன் மெய் மறந்து
பூப்போல இதழ்களை -நல்ல
அழகாக நீயும் விரிக்கிறே
புன்னகை -மிளிர -மெல்ல
விழிதனை கொஞ்சம் அசைக்கிறே
துள்ளித் தெரியும் -புள்ளி
மான் நீ தானே
தொரத்திப் -பிடிக்கும் -கில்லி
நான் தானே
மாலை பொழுது -மஞ்ச
வேலையிலே
மயில்கள் வந்து -கொஞ்ச
ஆடுது சோலையிலே
இல்லேன்னா - பிணக்கு
இங்கே திண்டாட்டம்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)