சிறந்து விளங்கும் சிகரமாகப் பூக்கள்
Jul 21, 2026,02:29 PM IST
- பி.எஸ்.முருகேசன்
சிரிக்கும் மலர்கள்
சிறகுகள் விரிக்கும்
மங்கையின் கூந்தலில்
மணம் தந்து ஜொலிக்கும்
காற்றினிலே வாசம்
கலந்து தெளிக்கும்
உதிர்ந்தாலும் வாசம்
உண்டு என உரைக்கும்
சிறந்து விளங்கும்
சிகரமாகப் பூக்கள்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)