என்னவளே!

Jul 20, 2026,04:32 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


வயதாகிக் கொண்டே

போகிறதே என்னவளே!

காலத்தை நிற்கச் சொல்லிக் 

கடுதாசி போடுவோமா! 


சுழன்று கொண்டே 

இருக்கும் பூமியைச்

சற்றே சுற்றாமல் 

நிற்கச் சொல்வோமா! 


காலையிலும் மாலையிலும் 

மாறி மாறி வரும் 

சூரியன் சந்திரனை விடுமுறை  

எடுக்கச் சொல்வோமா!




ஆண்டவனை ஆதரிக்கச்

சொல்லி 

விண்ணப்ப மனு 

கொடுக்கலாமா? 


கடிகாரத்தை நிற்கச் சொல்லி 

காலண்டரைக் கிழிக்காமல் 

இருந்து முயற்சித்துப்

பார்க்கலாமா! 


நவக்கிரகங்களை வேண்டி 

ஒவ்வொரு நாளையும் 

மெதுவாகச் செல்லச்

சொல்வோமா! 


மார்க்கண்டேயனுக்கு 

அருளியது போல் 

நமக்கும் அருளுமாறு

விதிக்கு விதிவிலக்கு 


அளிக்குமாறு  அந்தப் 

பிறை சூடிய பெருமான்

சிவனை வேண்டுவோமா?

சொல்லடி என்னவளே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்