- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
வயதாகிக் கொண்டே
போகிறதே என்னவளே!
காலத்தை நிற்கச் சொல்லிக்
கடுதாசி போடுவோமா!
சுழன்று கொண்டே
இருக்கும் பூமியைச்
சற்றே சுற்றாமல்
நிற்கச் சொல்வோமா!
காலையிலும் மாலையிலும்
மாறி மாறி வரும்
சூரியன் சந்திரனை விடுமுறை
எடுக்கச் சொல்வோமா!

ஆண்டவனை ஆதரிக்கச்
சொல்லி
விண்ணப்ப மனு
கொடுக்கலாமா?
கடிகாரத்தை நிற்கச் சொல்லி
காலண்டரைக் கிழிக்காமல்
இருந்து முயற்சித்துப்
பார்க்கலாமா!
நவக்கிரகங்களை வேண்டி
ஒவ்வொரு நாளையும்
மெதுவாகச் செல்லச்
சொல்வோமா!
நமக்கும் அருளுமாறு
விதிக்கு விதிவிலக்கு
அளிக்குமாறு அந்தப்
பிறை சூடிய பெருமான்
சிவனை வேண்டுவோமா?
சொல்லடி என்னவளே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு
"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்
Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!
சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!
அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!
மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026
கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!
{{comments.comment}}