காதலன் கவிதை எழுதினால்

Su.tha Arivalagan
Jun 29, 2026,02:58 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


எங்கேயோ  பார்த்த வெளிச்சம்

என்னுள்ளே ஏதோ மயக்கம்


என் எண்ணம் சாயும்போது

வட்டத்தின் கவிதை

ஆகும்


கண்களைத்தான் 

கண்ணால் பார்த்தேன்

கள்ளின் சுவை   சொட்டச்  சுவைத்தேன்


கடந்து நீ செல்லும்  போது

உடைந்தேதான் நானும் போனேன்




சென்பக மலரின் வாசம்

செந்தாழை மடல்  தனில்வீசும்


செங்கமல  முகமதில்

புதைந்தேன்

செங்காந்தள் விரல்களைப் படர்ந்தேன்


மீண்டுமே ஒருமுறை இவளை

தீண்டுமே என்னது விழி கள்


இதமாக ப் பாதம் பனிந்தே

இதழ் களால் வருடவிடுவேன்


தலைகோதும்  தளிர்க்கரம்

ரசிப்பேன்

சிலை நீயே தானென்று

மலைப்பேன்


என்னையே  நானும்

இழப்பேன்

மண் மீது சரிந்தே விழுவேன்