ஊரெல்லாம் ஊஞ்சலாடும் காதலே
Aug 21, 2026,10:46 AM IST
- பொள்ளாச்சி பாவலர் மாயோன் மங்கை
என் நினைவூரில் பூத்தவளே
என் நெஞ்சூரில் நிலைத்தவளே
என் இதழூரில் இனித்
தவளே
என் இதயத்தூரில் வாழ் பவளே
என் கால் தடத்தில் நடந்தவனே
என் வேல் விழியில்
இறந்தவனே
என் சிற்றிடையில்
சிதைந்தவனே
என் நெற்றியிலே
நெகிழ்ந்தவனே
என்னை ஓரக்கண்ணால் பார்த்தவளே
என்னப் பாராததுபோல் நடிப்பவளே
என்னை மட்டும் கொல்பவளே
என்னைக் கவர்ந்த
பெண்ணவளே
நாம் நினைவில் ஒன்றாய்க் கலந்து விட்டோம்
நாம் கந்தர்வமணத்தில்
இணைந்து விட்டோம்
நாம் காவியம் படைக்க
திகழ்ந்து விட்டோம்